
விக்ரம் அடுத்த பாகத்தில் இணைய விரும்பும் அனுராக் காஷ்யப்
அதிலும் படம் ரிலீஸாவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் வைத்த வேண்டுகோளான, “கைதி படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பாருங்கள்” என்று சொன்னதை கவனத்தில் எடுத்துக்கொண்ட அனுராக் காஷ்யப் முதலில் கைதி படத்தை பார்த்துவிட்டு அதன்பின்னர் விக்ரம் படத்தை பார்த்துள்ளார்.
இந்த இரண்டு படங்களையும் பார்த்த பின்னர் அவர், “உண்மையிலேயே இந்த இரண்டு படங்களையும் ரசித்துப் பார்த்தேன். இந்த யுனிவர்சலில் நானும் ஒரு நபராக இருக்க விரும்புகிறேன்” என்று இதன் அடுத்த பாகத்தில் தானும் நடிக்கவேண்டும் என்கிற தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் அனுராக் காஷ்யப்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!