
உணவருந்தி உரையாட காத்திருக்கும் சரத்குமார்; ரசிகர்களுக்கு அழைப்பு
அவரது பதிவு: என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதைகளை சற்று நினைவுகூறும் போது, வீடுகளுக்கு பத்திரிகை போடும் இளைஞனாக, சிறு பணியில் துவங்கிய பயணம், எத்தனை எத்தனையோ போராட்டங்கள், வேதனைகள், வலிகளுடன் இன்று நான் இருக்கும் உயரத்திற்கு அழைத்து வந்துள்ளது. இந்த இடத்தை அடைய எத்தனை நீண்ட தூரம் பயணித்துள்ளேன் என திரும்பி பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.
இத்தருணத்தில் என்னை விமர்சித்து, ஊக்குவித்து, ஆதரித்து ஏற்றுக்கொண்ட உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்க்கை பயணத்தில் பொதுவாக பலரை சந்தித்திருக்கிறேன். என்னை சந்திக்க விரும்பிய பலரை சூழல் காரணமாக சந்திக்க இயலாமல் இருந்திருக்கிறேன். தற்போது, தூரத்தில் இருந்து என்னை கண்டவர்களை, அருகில் கண்டு உபசரிக்க ஓர் வாய்ப்பாக "சரத்துடன் மதிய உணவு" திட்டமிட்டுள்ளேன். உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்! வாருங்கள், சந்திப்போம்!!. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!