
சமீபகாலமாக எனக்கு சோதனையான காலக்கட்டம் - கீர்த்தி சுரேஷ்
ஜூன் 04, 2022
Advertisement
தென்னிந்திய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛நடிகையாக இருப்பது கடினமான பயணம். வெற்றி, தோல்வியை சந்திக்கிறோம். இது நமது கையில் இல்லை. சமீபகாலமாக எனக்கு சோதனையான காலக்கட்டம். எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வர தான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என உணர வைத்தது. சாணிக் காயிதம், சர்காரு வாரி பட்டா பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளேன். இதற்காக உழைத்த இரண்டு படக்குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் தான் என் பலம், உங்களால் நான் இங்கே இருக்கிறேன். அதற்காக என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் எப்போதும் எல்லைகளை தாண்டி நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன்"" என்கிறார்.
Tags
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!