
பிளாஷ்பேக் : மகேந்திரனால் கைவிடப்பட்ட பிரேமி
ஆக 02, 2024
Advertisement
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பிரேமி. "உதிரிபூக்கள்" படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த பிரேமியை காதலித்தார் அந்த படத்தின் இயக்குனர் மகேந்திரன். அவர் ஏற்கெனவே திருமணமாவர் என்பதை அறிந்த பிறகும் அவர் மீதிருந்த உயர்ந்த மதிப்பின் காரணமாக காதலை தொடர்ந்தார் பிரேமி. அதன்பிறகு மகேந்திரன் இயக்கிய படங்கள் அனைத்திலும் ஏதோ ஒரு கேரக்டரில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் மகேந்திரன் படம் இயக்குவதை நிறுத்தியதும் அவருக்கு பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதனால் இரு குடும்பங்களை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தன்னோடு 7 வருடங்கள் வாழ்ந்து ஒரு குழந்தைக்கும் தாயான பிரேமியை கைவிட்டார் மகேந்திரன். அதன்பிறகு பிரேமி தனது உறவினர்கள் ஆதரவில் வாழ்ந்து மீண்டும் படங்களில் நடித்து தனது மகனை வளர்த்தெடுத்தார்.
மகேந்திரன் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது பல வருடங்களுக்கு பிறகு தனது மகனுடன் மகேந்திரனை சந்தித்தார் பிரேமி. தனது கடைசி காலத்தில் பிரேமியை பிரிந்ததை நினைத்து மகேந்திரன் நிறைய வருந்தியதாக சொல்வார்கள்.
இந்த தகவலை பிரேமியை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மகேந்திரன் படம் இயக்குவதை நிறுத்தியதும் அவருக்கு பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதனால் இரு குடும்பங்களை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தன்னோடு 7 வருடங்கள் வாழ்ந்து ஒரு குழந்தைக்கும் தாயான பிரேமியை கைவிட்டார் மகேந்திரன். அதன்பிறகு பிரேமி தனது உறவினர்கள் ஆதரவில் வாழ்ந்து மீண்டும் படங்களில் நடித்து தனது மகனை வளர்த்தெடுத்தார்.
மகேந்திரன் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது பல வருடங்களுக்கு பிறகு தனது மகனுடன் மகேந்திரனை சந்தித்தார் பிரேமி. தனது கடைசி காலத்தில் பிரேமியை பிரிந்ததை நினைத்து மகேந்திரன் நிறைய வருந்தியதாக சொல்வார்கள்.
இந்த தகவலை பிரேமியை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!