Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 3 நாளில் கொல்லும் வைரஸ்: சீன விஞ்ஞானிகள் உருவாக்கம்

3 நாளில் கொல்லும் வைரஸ்: சீன விஞ்ஞானிகள் உருவாக்கம்

3 நாளில் கொல்லும் வைரஸ்: சீன விஞ்ஞானிகள் உருவாக்கம்

3 நாளில் கொல்லும் வைரஸ்: சீன விஞ்ஞானிகள் உருவாக்கம்

UPDATED : மே 28, 2024 12:00 AMADDED : மே 28, 2024 11:19 AM


Google News
பீஜிங்:
சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும்.
சீனாவில் இருந்து உருவாகியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளனர். இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும். எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வைரஸ் செலுத்தப்பட்டு ஆய்வில் பயன்படுத்திய சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் சிரங்குகள் ஏற்பட்டு இறுதியில் அவற்றின் கண்பார்வை பறிபோயின.
கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா வைரஸின் பாதிப்பு, அறிகுறி குறித்து ஆய்வு செய்வதே இதன் நோக்கம். மேலும் வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us