கர்நாடகாவில் மண்பாண்ட கலை கல்வி வழங்கும் ஒரே பயிற்சி மையம்
கர்நாடகாவில் மண்பாண்ட கலை கல்வி வழங்கும் ஒரே பயிற்சி மையம்
கர்நாடகாவில் மண்பாண்ட கலை கல்வி வழங்கும் ஒரே பயிற்சி மையம்
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 02:31 PM
பெங்களூரூ:
கிராமப்புற குடிசை தொழிலாக இருந்த மண்பாண்டங்கள் செய்யும் கலை, நவீன உலகில் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
ஆனால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிலேயே மண்பாண்ட கலையை கல்வியாக பயிற்றுவித்து வரும் ஒரே நிறுவனம், பெலகாவி மாவட்டம், கானாபுரத்தில் உள்ள மத்திய கிராம கும்பரிகா பயிற்சி நிறுவனம்.
இந்த பயிற்சி மையம், 1954ல் கானாபூரின் புறநகர் பகுதியில் மலபிரபா ஆற்றங்கரையில், மூன்றரை ஏக்கரில் துவங்கப்பட்டது.
இதன் பின், கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கோவா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, பீஹார், உத்தர பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் இளைஞர்கள், பெண்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று, கைவினைஞர்களாக மாறியுள்ளனர்.
இந்த பயிற்சியை படிக்காதவர்கள் மட்டுமின்றி, படித்தவர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பலர் சுய தொழில் செய்பவர்களாகவும், தொழில் முனைவோராகவும் உள்ளனர். மண்பாண்ட தொழிலுக்கு நவீன டச் கொடுத்துள்ளனர். இந்நிறுவனம், நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கி உள்ளது.
16 வயது முதல்
இங்கு பயிற்சி பெற விரும்புவோர், 16 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இங்கேயே தங்கி பயிற்சி பெறும் வசதிகள் உள்ளன. 40 பேர் வரை தங்கி பயிற்சி பெறலாம். இலவச உணவு, தங்கும் விடுதி வசதியுடன் ஒவ்வொரு மாதமும் 1,500 முதல் 3,000 ரூபாய் வரை கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
பல்வேறு வகையான வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள், சிலைகள், பொம்மைகள், பூஜை உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு 50 லிட்டர் குடிநீர் ஹீட்டர், குடிநீர் குடம், உணவு தயாரிக்கும் பாத்திரம், பணப்பெட்டி, தட்டு, அலங்கார குடம், தொங்கும் சங்கிலி, பூங்தொட்டி, அடுப்பு, பானை, களிமண் பாட்டில்கள், காது, கழுத்தில் போட ஆபரணங்களை எப்படி செய்வது, குப்பை தொட்டி போன்றவற்றை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலவச தங்கும் வசதி
ஆணைய மூத்த செயல் அதிகாரி சேஷோ நாராயண் தேஷ்பாண்டே கூறியதாவது:
நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பயிற்சி பெற்று, பல கலை படைப்புகளை உருவாக்க, களிமண்ணில் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.
கலைப்படைப்புகளை கை அல்லது இயந்திரம் மூலம் செய்யலாம். மாணவர்களுக்கு இலவச உணவு, தங்கும் வசதி உள்ளது. ஆனால் மாணவியருக்கு இலவச உணவு மட்டுமே வழங்கப்படும்; தங்கும் வசதி இல்லை. எனவே, அவர்கள் வெளியே தனியாக அறையோ அல்லது வீடோ எடுத்து தங்கிக் கொள்ளலாம்.
மத்திய அரசின் மண்பாண்ட அதிகாரம் அளிக்கும் திட்டத்தின் கீழ், இயந்திர சக்கரங்களும் வினியோகிக்கப்படுகின்றன. குடிசை தொழில் தொடர்பாக ஸ்டார்அப் நிறுவனங்களுக்கும் அரசு கடனுதவி அளித்து வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
மண்பாண்ட பயிற்சியாளர் சாய்ராம செட்டி கூறியதாவது:
கானாபூரில் காணப்படும் மண், இந்தியாவில் வேறு எங்கும் காணப்படவில்லை. இங்குள்ள மண், தனித்தன்மை வாய்ந்தது, இரும்பு சத்து நிறைந்தது. அதிகம் ஒட்டும் பொருள்; அதிக நாள் நீடித்து நிற்கும்.மலபிரபா நதிக்கரையில் களிமண் அதிகம். களிமண், மணல், ஏரி மண் என இயந்திரத்தின் உதவியுடன், மூன்று மண்ணையும் கலக்கிறோம். அதன் பிறகு மண் பதப்படுத்தும் சூளைகளில் போடப்பட்டு எரிக்கப்படுகிறது.
மண் கடினப்படுத்தப்பட்ட பின், காய்ந்து, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. பின், அந்த மண்ணை பயன்படுத்தி, என்னென்ன செய்யலாம் என்பதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். இங்கு பயிற்சி பெறுவோருக்கு மண்பாண்ட திறனுடன், சந்தைப்படுத்தல் மற்றும் வங்கியில் கடன் வாங்கும் வசதிகள் பற்றிய தகவல்களும் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்த பயிற்சி மையத்தில் ஒரு மாதம் அமெச்சூர் கோர்ஸ்; அட்வான்ஸ் பாட்டர் கோர்ஸ்; இரண்டு மாதம் டெரகோட்டா ஆர்ட்வேர் படிப்பு; நான்கு மாத வீல் பண்பாண்டங்கள் உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
என்னென்ன படிப்புகள்?
மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்த பயிற்சி மையத்தில் ஒரு மாதம் அமெச்சூர் கோர்ஸ்; அட்வான்ஸ் பாட்டர் கோர்ஸ்; இரண்டு மாதம் டெரகோட்டா ஆர்ட்வேர் படிப்பு; நான்கு மாத வீல் ம ண்பாண்டங்கள் உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கிராமப்புற குடிசை தொழிலாக இருந்த மண்பாண்டங்கள் செய்யும் கலை, நவீன உலகில் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
ஆனால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிலேயே மண்பாண்ட கலையை கல்வியாக பயிற்றுவித்து வரும் ஒரே நிறுவனம், பெலகாவி மாவட்டம், கானாபுரத்தில் உள்ள மத்திய கிராம கும்பரிகா பயிற்சி நிறுவனம்.
இந்த பயிற்சி மையம், 1954ல் கானாபூரின் புறநகர் பகுதியில் மலபிரபா ஆற்றங்கரையில், மூன்றரை ஏக்கரில் துவங்கப்பட்டது.
இதன் பின், கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கோவா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, பீஹார், உத்தர பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் இளைஞர்கள், பெண்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று, கைவினைஞர்களாக மாறியுள்ளனர்.
இந்த பயிற்சியை படிக்காதவர்கள் மட்டுமின்றி, படித்தவர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பலர் சுய தொழில் செய்பவர்களாகவும், தொழில் முனைவோராகவும் உள்ளனர். மண்பாண்ட தொழிலுக்கு நவீன டச் கொடுத்துள்ளனர். இந்நிறுவனம், நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கி உள்ளது.
16 வயது முதல்
இங்கு பயிற்சி பெற விரும்புவோர், 16 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இங்கேயே தங்கி பயிற்சி பெறும் வசதிகள் உள்ளன. 40 பேர் வரை தங்கி பயிற்சி பெறலாம். இலவச உணவு, தங்கும் விடுதி வசதியுடன் ஒவ்வொரு மாதமும் 1,500 முதல் 3,000 ரூபாய் வரை கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
பல்வேறு வகையான வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள், சிலைகள், பொம்மைகள், பூஜை உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு 50 லிட்டர் குடிநீர் ஹீட்டர், குடிநீர் குடம், உணவு தயாரிக்கும் பாத்திரம், பணப்பெட்டி, தட்டு, அலங்கார குடம், தொங்கும் சங்கிலி, பூங்தொட்டி, அடுப்பு, பானை, களிமண் பாட்டில்கள், காது, கழுத்தில் போட ஆபரணங்களை எப்படி செய்வது, குப்பை தொட்டி போன்றவற்றை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலவச தங்கும் வசதி
ஆணைய மூத்த செயல் அதிகாரி சேஷோ நாராயண் தேஷ்பாண்டே கூறியதாவது:
நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பயிற்சி பெற்று, பல கலை படைப்புகளை உருவாக்க, களிமண்ணில் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.
கலைப்படைப்புகளை கை அல்லது இயந்திரம் மூலம் செய்யலாம். மாணவர்களுக்கு இலவச உணவு, தங்கும் வசதி உள்ளது. ஆனால் மாணவியருக்கு இலவச உணவு மட்டுமே வழங்கப்படும்; தங்கும் வசதி இல்லை. எனவே, அவர்கள் வெளியே தனியாக அறையோ அல்லது வீடோ எடுத்து தங்கிக் கொள்ளலாம்.
மத்திய அரசின் மண்பாண்ட அதிகாரம் அளிக்கும் திட்டத்தின் கீழ், இயந்திர சக்கரங்களும் வினியோகிக்கப்படுகின்றன. குடிசை தொழில் தொடர்பாக ஸ்டார்அப் நிறுவனங்களுக்கும் அரசு கடனுதவி அளித்து வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
மண்பாண்ட பயிற்சியாளர் சாய்ராம செட்டி கூறியதாவது:
கானாபூரில் காணப்படும் மண், இந்தியாவில் வேறு எங்கும் காணப்படவில்லை. இங்குள்ள மண், தனித்தன்மை வாய்ந்தது, இரும்பு சத்து நிறைந்தது. அதிகம் ஒட்டும் பொருள்; அதிக நாள் நீடித்து நிற்கும்.மலபிரபா நதிக்கரையில் களிமண் அதிகம். களிமண், மணல், ஏரி மண் என இயந்திரத்தின் உதவியுடன், மூன்று மண்ணையும் கலக்கிறோம். அதன் பிறகு மண் பதப்படுத்தும் சூளைகளில் போடப்பட்டு எரிக்கப்படுகிறது.
மண் கடினப்படுத்தப்பட்ட பின், காய்ந்து, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. பின், அந்த மண்ணை பயன்படுத்தி, என்னென்ன செய்யலாம் என்பதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். இங்கு பயிற்சி பெறுவோருக்கு மண்பாண்ட திறனுடன், சந்தைப்படுத்தல் மற்றும் வங்கியில் கடன் வாங்கும் வசதிகள் பற்றிய தகவல்களும் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்த பயிற்சி மையத்தில் ஒரு மாதம் அமெச்சூர் கோர்ஸ்; அட்வான்ஸ் பாட்டர் கோர்ஸ்; இரண்டு மாதம் டெரகோட்டா ஆர்ட்வேர் படிப்பு; நான்கு மாத வீல் பண்பாண்டங்கள் உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
என்னென்ன படிப்புகள்?
மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்த பயிற்சி மையத்தில் ஒரு மாதம் அமெச்சூர் கோர்ஸ்; அட்வான்ஸ் பாட்டர் கோர்ஸ்; இரண்டு மாதம் டெரகோட்டா ஆர்ட்வேர் படிப்பு; நான்கு மாத வீல் ம ண்பாண்டங்கள் உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.