Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு குழந்தைகளின் நுாறாவது கச்சேரி

சிறப்பு குழந்தைகளின் நுாறாவது கச்சேரி

சிறப்பு குழந்தைகளின் நுாறாவது கச்சேரி

சிறப்பு குழந்தைகளின் நுாறாவது கச்சேரி

UPDATED : ஏப் 02, 2024 12:00 AMADDED : ஏப் 02, 2024 09:09 AM


Google News
சென்னை:
சூர்யா ஸ்கூல் ஆப் மியூசிக் சார்பில், பாடகி பிரபா குருமூர்த்தி ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசை கற்பித்து மேடையேற்றி வருகிறார்.
வரும் ஏப்., 2ம் தேதி, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, சூர்யா ஸ்கூல் ஆப் மியூசிக்சார்பில், சென்னை, காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லுாரி அரங்கில் உள்ள மியூசியம் ஆப் பாசிபிளிட்டீஸ் அரங்கில், ஏப்., 2 மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை, சிறப்பு குழந்தைகளின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதில், முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஜெ.பி.கலாசார அறக்கட்டளை நிறுவனர் ஜெ.பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us