Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு முறைகேடு: வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ.,

நீட் தேர்வு முறைகேடு: வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ.,

நீட் தேர்வு முறைகேடு: வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ.,

நீட் தேர்வு முறைகேடு: வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ.,

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AMADDED : ஜூன் 24, 2024 10:37 AM


Google News
புதுடில்லி:
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.

மே 5ல் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதிலும் குளறுபடி நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பீஹாரில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிராவில் 2 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதனை ஏற்று, நீட் தேர்வில் நடந்த முறைகேடு மற்றும் குளறுபடி தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். இதனையடுத்து முக்கிய குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us