Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே நாளில் பட்டம் பெற்ற தாய் - மகன்

ஒரே நாளில் பட்டம் பெற்ற தாய் - மகன்

ஒரே நாளில் பட்டம் பெற்ற தாய் - மகன்

ஒரே நாளில் பட்டம் பெற்ற தாய் - மகன்

UPDATED : ஜூலை 10, 2024 12:00 AMADDED : ஜூலை 10, 2024 11:47 AM


Google News
பெங்களூரு:
பெங்களூரின், சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் ரஞ்சனி நிரஞ்சன், 48, பிஎச்.டி., பட்டமும், அவரது மகன் ராகவா, 22, எஸ்.என்.எம்., டெக் பட்டமும் பெற்றனர்.

ரஞ்சனி: என் மகனுடன், நானும் பட்டம் பெற்றதற்கு, மகிழ்ச்சி. இது எங்கள் குடும்பத்தின் சாதனை. அனைவருக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. என்னை விட, 13 வயது சிறிய மாணவர்களுடன் வகுப்பில் அமர்ந்திருந்தது, ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. நாளடைவில் சரியானது.

ராகவா: என் தாயார் பாடத்தில் சந்தேகங்களை, என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார். குறிப்பாக கணிதம் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு விளக்கம் கேட்பார். தாயுடன் பட்டம் பெற்றது, எனக்கு பெருமையான விஷயம். இச்சாதனைக்கு, என் தந்தையின் ஊக்கமே காரணம். எங்களுக்கு முதுகெலும்பாக இருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us