Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்!: சொல்கிறார் ஸ்டாலின்

கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்!: சொல்கிறார் ஸ்டாலின்

கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்!: சொல்கிறார் ஸ்டாலின்

கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்!: சொல்கிறார் ஸ்டாலின்

UPDATED : ஏப் 23, 2024 12:00 AMADDED : ஏப் 23, 2024 05:35 PM


Google News
Latest Tamil News
சென்னை:
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக புத்தக தினம் குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை.

புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள். பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் துவங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.

கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us