Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஞ்சி மாவட்டத்திற்கு தேர்வு அலுவலர் நியமனம்

காஞ்சி மாவட்டத்திற்கு தேர்வு அலுவலர் நியமனம்

காஞ்சி மாவட்டத்திற்கு தேர்வு அலுவலர் நியமனம்

காஞ்சி மாவட்டத்திற்கு தேர்வு அலுவலர் நியமனம்

UPDATED : பிப் 06, 2024 12:00 AMADDED : பிப் 06, 2024 05:10 PM


Google News
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுதும், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.இந்த தேர்வு மையங்களை கண்காணிக்கவும், வினாத்தாள்களின் பாதுகாப்பு உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தேர்வு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார்கள்.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா, செங்கல்பட்டு மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்க திட்ட இயக்குனர் ஆர்த்தி, திருவள்ளூர் மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக பள்ளி கல்வி இயக்க இயக்குனர் அறிவொளி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவர்கள், தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம், வினாத்தாள்கள் மையங்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் பணிகள் உள்ளிட்ட தேர்வு தொடர்பான கண்காணிப்பு பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்து உள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us