Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் அரசு நிதிஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பு

அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் அரசு நிதிஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பு

அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் அரசு நிதிஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பு

அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் அரசு நிதிஒதுக்கீடு செய்ய எதிர்பார்ப்பு

UPDATED : ஜன 27, 2025 12:00 AMADDED : ஜன 27, 2025 11:36 AM


Google News
Latest Tamil News
உடுமலை:
அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு அடிப்படை யோகா பயிற்சி அளிக்க, அரசு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களை மனதளவில் ஒருநிலைப்படுத்தவும், கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும், யோகா சிறந்த பயிற்சியாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் முன்பு யோகா பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டு, அடிப்படை பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கான முக்கியத்துவம் இல்லை.

சில அரசுப்பள்ளிகளில், தன்னார்வலர்களின் உதவியால், மாணவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது மாணவர்கள், பல்வேறு சூழல்களால் தவறான வழிகளில் செல்வது, வன்முறையில் ஈடுபடுவது, கவனச்சிதறல் என, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

மாணவர்களின் சிந்தனையை மேம்படுத்துவதற்கும், மன ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும், யோகா மற்றும் தியான பயிற்சிகளும் கல்வி இணைசெயல்பாடுகளின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அதற்கு அரசின் உதவியும் அவசியமாக இருப்பதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: உளவியல் ரீதியாகவும், குடும்ப சூழ்நிலையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும், இப்பயிற்சி மிகவும் பயனுள்ள ஒன்று. இருப்பினும், இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது.

இப்பயிற்சிகளில் பங்கேற்க, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கல்வித்துறை போட்டிகளை நடத்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் யோகா பயிற்சி அளிப்பதற்கு அரசு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதன் வாயிலாக மட்டுமே, முறையான யோகா வகுப்புகள் பள்ளிகளில் செயல்படுத்த முடியும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us