Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

UPDATED : ஜூன் 04, 2024 12:00 AMADDED : ஜூன் 04, 2024 12:35 PM


Google News
Latest Tamil News
சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Application for Retotalling / Revaluation என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஜூன் 5 (புதன்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் ஜூன் 10 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

கட்டண விவரம்:

மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505
மறுகூட்டல்-II

மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us