அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கை துவக்கம்
அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கை துவக்கம்
அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கை துவக்கம்
UPDATED : மார் 14, 2025 12:00 AM
ADDED : மார் 14, 2025 10:36 AM

சென்னை:
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணையதள வசதியை, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று துவக்கி வைத்தார்.
பின், கோவி.செழியன் பேசியதாவது:
பாலிடெக்னிக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, https://tnpoly.in என்ற இணையதளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதில், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேர பட்டயப் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டயப் படிப்பில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டிலும், இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ., படித்த மாணவர்கள், இராண்டாம் ஆண்டிலும் சேரலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணையதள வசதியை, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று துவக்கி வைத்தார்.
பின், கோவி.செழியன் பேசியதாவது:
பாலிடெக்னிக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, https://tnpoly.in என்ற இணையதளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதில், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேர பட்டயப் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டயப் படிப்பில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டிலும், இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ., படித்த மாணவர்கள், இராண்டாம் ஆண்டிலும் சேரலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.