Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் இணைய கலெக்டர் அழைப்பு

தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் இணைய கலெக்டர் அழைப்பு

தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் இணைய கலெக்டர் அழைப்பு

தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் இணைய கலெக்டர் அழைப்பு

UPDATED : ஆக 21, 2024 12:00 AMADDED : ஆக 21, 2024 08:31 AM


Google News
Latest Tamil News
கோவை:
தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், கோவையில் பயனடைவோர் எண்ணிக்கை சுமார், 16,000 ஆக உயர்ந்துள்ளது. தகுதியுள்ளவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், கோவையில், 242 கல்லூரிகளில் பயிலும் 15,754 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6 மற்றும் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும், தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு போன்ற உயர்கல்வி படிப்புகள் படிக்கும் மாணவர்கள் பயன்பெறலாம்.

எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்து, தொழிற்பயிற்சி பயில்வோரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். அதேபோன்று, பிற மாநிலங்களில் செயல்படும் ஐ.ஐ.டி., என்.ஐ,டி.,போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும், இத்திட்டத்தில் பயனடையலாம்.

கோவையில் மட்டும், 242 கல்லூரிகளில் பயிலும் 15,754 மாணவர்கள் பயனடைகின்றனர். இதில் தகுதியுள்ளவர்கள் இணைய, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us