Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லுாரிகளில் போதை பொருள் தடுக்க உத்தரவு

மருத்துவ கல்லுாரிகளில் போதை பொருள் தடுக்க உத்தரவு

மருத்துவ கல்லுாரிகளில் போதை பொருள் தடுக்க உத்தரவு

மருத்துவ கல்லுாரிகளில் போதை பொருள் தடுக்க உத்தரவு

UPDATED : ஆக 21, 2024 12:00 AMADDED : ஆக 21, 2024 08:32 AM


Google News
Latest Tamil News
சென்னை:
கல்லூரி வளாகங்களுக்குள் போதை பொருள் இல்லாததை உறுதிபடுத்தி அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலர் ஸ்ரீனிவாஸ், அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கல்வி வளாகங்களுக்குள் போதை பொருள் இல்லாத சூழலை ஏற்படுத்தவும் அதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லுாரிகளில் நாஷா முக்த் பாரத் அபியான் என்ற போதை பொருள் இல்லாத தேசம் திட்டத்தின் கீழ், சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். மாணவர் விடுதிகளில் அக்குழுக்களை உருவாக்குதல் அவசியம். இதுதொடர்பாக செயல் திட்டங்களை வகுத்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மத்திய சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us