அடுத்த பிரதமர் யார் ? பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லை
அடுத்த பிரதமர் யார் ? பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லை
அடுத்த பிரதமர் யார் ? பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லை

நன்றி தெரிவித்தனர்
பின், இரவு 9:00 மணியளவில், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, பா.ஜ., கட்சி தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங், கட்சி தொண்டர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இங்கும் ஆட்சி அமைப்பது பற்றி எதுவும் பேசப்படவில்லை. மாறாக, கடந்த 10 ஆண்டு சாதனைகளை மட்டும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
மீண்டும் மோடி கோஷம்
மற்ற கட்சிகளின் அரசியல் நகர்வுகள் இப்படி இருக்க, பா.ஜ., கிட்டத்தட்ட நிசப்தமாக இருக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையோடு வென்றபோது, 'மீண்டும் மோடி' என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. ஆனால், இந்த முறை அவ்வாறு எந்த பேச்சும் பா.ஜ.,வில் இல்லை.
ஆசி கிடைக்காது
இதில் சிக்கல் என்னவென்றால், நிதீஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளிப்பர் என எதிர்பார்க்க முடியாது. பிரதமர் தேர்விலேயே அவர்கள் பங்கு இருக்கும். நிதீஷ், மோடிக்கு ஆதரவளிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.