தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

பங்கேற்பேன்
பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது. கட்சி மேலிட அனுமதி பெற்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பேன். தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது.
வாழ்த்துகள்
முக்கியமான விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக அரசுக்கு வாழ்த்துகள். எந்த காரணத்தை கொண்டும் தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், பா.ஜ., தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது. இந்தியாவுக்கு அதிகமான வரி வருவாயை தென் மாநிலங்கள் வழங்கி வருகின்றன.
அதிக வரி
வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் அதிக வரியை செலுத்துகின்றன. தென் மாநிலங்களில் பா.ஜ.,வை வளர அனுமதிக்காததால், இத்தகைய முயற்சியை பா.ஜ., மேற்கொண்டுள்ளது. நடக்க போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல. இது தென் இந்தியாவின் தொகுதிகளைக் குறைக்கும் நடவடிக்கை ஆகும். இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.