Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காட்டு யானையுடன் 'செல்பி' சுற்றுலா பயணியர் போட்டி

காட்டு யானையுடன் 'செல்பி' சுற்றுலா பயணியர் போட்டி

காட்டு யானையுடன் 'செல்பி' சுற்றுலா பயணியர் போட்டி

காட்டு யானையுடன் 'செல்பி' சுற்றுலா பயணியர் போட்டி

ADDED : ஜன 05, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
சாம்ராஜ்நகர் : குண்டுலு பேட்டின் கோபால சுவாமி மலையில் தென்பட்ட காட்டு யானையுடன் 'செல்பி' எடுக்க சுற்றுலா பயணியர் முட்டி மோதினர்.

சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டில் அமைந்துள்ள கோபால சுவாமி மலை, வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். இங்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.

சில ஆண்டுகளாக காட்டு யானை ஒன்று அவ்வப்போது, மலையின் கோபால சுவாமி கோவில் வளாகத்துக்கு வந்து, சிறிது நேரம் தங்கிவிட்டு மீண்டும் காட்டுக்குள் செல்லும். இந்த வீடியோ பல முறை சமூக வலைதளங்களில் பரவியது.

கோபால சுவாமி மலைக்கு வரும் சுற்றுலா பயணியர், காட்டு யானை வருமா என, ஆர்வத்துடன் எதிர்பார்ப்பர். இதுவரை அந்த யானையால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை, கோவில் வளாகத்தில் காட்டு யானை காணப்பட்டது. இதை பார்த்த சுற்றுலா பயணியர் குஷியடைந்தனர்.

அதன் அருகில் சென்று போட்டோ, வீடியோ 'செல்பி' எடுத்தனர். யானை யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், அங்கிருந்து சென்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us