நிர்வாண வீடியோ வெளியிடுவதாக மிரட்டல்; போக்சோ வழக்கில் வாலிபர் கைது
நிர்வாண வீடியோ வெளியிடுவதாக மிரட்டல்; போக்சோ வழக்கில் வாலிபர் கைது
நிர்வாண வீடியோ வெளியிடுவதாக மிரட்டல்; போக்சோ வழக்கில் வாலிபர் கைது
ADDED : செப் 15, 2025 10:28 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, சமூகவலைதளத்தில் பெண்ணின் நிர்வாண வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த, 15 வயது பெண்ணின் பெற்றோர், பாலக்காடு டவுன் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். அதில், 'தங்களது மகளின் நிர்வாண வீடியோக்களை சமூகவலைதளத்தில் பரப்புவதாக வாலிபர் ஒருவர் மிரட்டுவதாக,' புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த ஏ.எஸ்.பி., ராஜேஷ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விபின்குமார் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், மைனர் பெண்ணை மிரட்டியது, கொல்லம் மாவட்டம் புன்னல பிறவந்தூர் பகுதியை சேர்ந்த பிபின், 22, என்பது தெரிந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளம் மாவட்டத்தில் அவரை பிடித்த போலீசார், போக்சோ பிரிவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் விபின்குமார் கூறியதாவது:
சமூகவலைதளம் வழியாக, புகார்தாரரின் பெண்ணுடன் பிபினுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பெண்ணின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பிபின் பெற்றுள்ளார்.
அதன்பின், தன்னுடனும், நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நிர்வாண வீடியோ, போட்டோக்களை சமூகவலைதளத்தில் அதை பரப்புவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து, அப்பெண் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியதால், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். விசாரணையில், பிபின் பச்சை குத்தும் கலைஞர் என்பதும், பியூட்டிஷியன் பட்ட மாணவர் என்பதும் தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் பிபின் இருக்கும் இடத்தை அறித்து கைது செய்தோம். இவர், இதேபோன்று ஏராளமான பெண்களை அச்சுறுத்தி பணியவைத்துள்ளார். கோழிக்கோடு தேஞ்சிப்பாலம் போலீஸ் ஸ்டேஷனில் இதேபோன்று இவர் மீது வழக்கு உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு, கூறினார்.