ஆட்சி அமைக்க வியூகம் உள்ளது: ராகுல் பேட்டி
ஆட்சி அமைக்க வியூகம் உள்ளது: ராகுல் பேட்டி
ஆட்சி அமைக்க வியூகம் உள்ளது: ராகுல் பேட்டி

மக்கள் தீர்ப்பு
அப்போது கார்கே கூறியதாவது: லோக்சபா தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளித்த முடிவு. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. நடந்து முடிந்த தேர்தல் என்பது மக்களுக்கும் மோடிக்கும் இடையே நடந்த தேர்தல். மோடிக்கு எதிராக மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். மோடிக்கு பெரிய தோல்வி கிடைத்துள்ளது.
நம்பிக்கை
ராகுல் கூறியதாவது: நடந்த தேர்தல் ஒரு அரசியல் ரீதியிலான தேர்தல் கிடையாது. அரசியல் அமைப்பை நிறுவனங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் தாக்குதலுக்கு எதிரான போர் இது.அரசியல்சாசனத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் ஆகவே இந்த லோக்சபா தேர்தல் அமைந்துள்ளது. அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்தியதற்கு எதிரான தேர்தல் இது. பாஜ., மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம்.
நாளை கூட்டம்
இதனைத் தொடர்ந்து ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்சி அமைப்பது தொடர்பாக ‛ இண்டியா ' கூட்டணி கட்சியினருடன் நாளை (ஜூன் 5) நடக்கும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தெலுங்கு தேசம், ஐஜத கட்சியை அழைப்பது குறித்து நாளை ஆலோசித்து முடிவு. ஆட்சி அமைப்பதற்கு எங்களுக்கும், பா.ஜ.,விற்கும் இடையே மெலிதான கோடு மட்டுமே உள்ளது.
ஆலோசனை
நிருபர்களின் கேள்விக்கு கார்கே கூறுகையில், எங்களின் எல்லா யுக்திகளையும் சொல்லிவிட்டால் மோடி உஷார் ஆகிவிடுவார். கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.