Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/2வதும் பெண் குழந்தை பிறந்ததால் விற்க தந்தை முயற்சி

2வதும் பெண் குழந்தை பிறந்ததால் விற்க தந்தை முயற்சி

2வதும் பெண் குழந்தை பிறந்ததால் விற்க தந்தை முயற்சி

2வதும் பெண் குழந்தை பிறந்ததால் விற்க தந்தை முயற்சி

ADDED : ஜன 07, 2024 02:54 AM


Google News
ஹாவேரி, : இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால், அதிருப்தியடைந்த தந்தை, தன் பச்சிளம் குழந்தையை விற்க முயற்சித்தார். இவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.

ஹாவேரி, பேடகியில் வசிப்பவர் சித்த லிங்கப்பா, 32. இவரது மனைவி கீதா, 28. தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக கீதா கருவுற்றார். ஐந்து நாட்களுக்கு முன்பு, பேடகி தாலுகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஆண் குழந்தையை எதிர்பார்த்த சித்தலிங்கப்பா, இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றமடைந்தார். தன் பச்சிளம் குழந்தையை விற்க முடிவு செய்தார். நேற்று காலை குழந்தையை கடத்தி, மருத்துவமனை அருகிலேயே, வேறொரு பெண்ணுக்கு விற்க முயற்சித்தார்.

அப்போது தம்பதிக்கு அறிமுகம் உள்ள சில இளைஞர்கள், இதை கண்டனர்.

சித்த லிங்கப்பாவை தடுத்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். நடந்ததை விவரித்தனர்.

கணவரின் செயலால் வெறுப்படைந்த கீதா, மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில், ஹாவேரி நகரின், காந்தி சதுக்கத்தில் உள்ள மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்குச் சென்றார்.

கணவர் மீது புகார் அளித்தார். கணவருக்கு ஏற்கனவே வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது, தன் குழந்தையை விற்க முயற்சித்ததையும் விவரித்தார்.

போலீசாரும் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us