Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/டாக்டரை கடத்தி பணம் பறித்த குற்றவாளி 9 ஆண்டுக்கு பின் கைது

டாக்டரை கடத்தி பணம் பறித்த குற்றவாளி 9 ஆண்டுக்கு பின் கைது

டாக்டரை கடத்தி பணம் பறித்த குற்றவாளி 9 ஆண்டுக்கு பின் கைது

டாக்டரை கடத்தி பணம் பறித்த குற்றவாளி 9 ஆண்டுக்கு பின் கைது

ADDED : ஜன 06, 2024 06:57 AM


Google News
மைசூரு: டாக்டர் கடத்தல் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளி, ஒன்பது ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

மைசூரின், குவெம்பு நகரில் வசிப்பவர் டாக்டர் மகேஷ். இவரிடம் பணம் பறிக்கும் நோக்கில், பனிராஜ் என்பவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 2014ல் திட்டம் தீட்டி, டாக்டர் மகேஷை காரில் கடத்திச் சென்றார்.

மங்களூருக்கு கடத்திச் சென்று வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி, 3 லட்சம் ரூபாய் வசூலித்த பின் விடுவித்தனர்.

இதுகுறித்து, குவெம்பு நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அன்று முதல் போலீசார், கடத்தல்காரர்களை தேடி வந்தனர்.

ஒன்பது ஆண்டுகளுக்கு பின், பனிராஜை கண்டுபிடித்து கைது செய்தனர். கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us