வரையாடு பிரசவம் முடிவுக்கு வந்தது இரவிகுளம் தேசிய பூங்கா ஏப்.1ல் திறப்பு
வரையாடு பிரசவம் முடிவுக்கு வந்தது இரவிகுளம் தேசிய பூங்கா ஏப்.1ல் திறப்பு
வரையாடு பிரசவம் முடிவுக்கு வந்தது இரவிகுளம் தேசிய பூங்கா ஏப்.1ல் திறப்பு
ADDED : மார் 28, 2025 02:10 AM

மூணாறு:''கேரள மாநிலம் இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகளின் பிரசவம் முடிவுக்கு வந்ததால் ஏப்.1ல் பூங்கா திறக்கப்படும்'' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடு ஏராளாமாக உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலாப் பயணிகளை கடும் கட்டுப்பாடுகளுடன் வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். ஆண்டு தோறும் வரையாடுகளின் பிரசவ காலத்தில் மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும்.
அதன்படி பிப்.1ல் பூங்கா மூடப்பட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நிசப்தமான சூழலில் வரையாடுகள் குட்டிகளை ஈன்றெடுத்தன. பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை, குமரிக்கல்லு, ஆனமுடி, மேஸ்திரிகெட்டு, வரையாடுமலை ஆகிய பகுதிகளில் குட்டிகள் அதிகம் பிறந்துள்ளதாக வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பில் தெரியவந்தது.
வரையாடுகளின் பிரசவம் முடிவுக்கு வந்ததால் ஏப்.1ல் பூங்கா திறக்கப்பட்டு ராஜமலைக்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கு கடந்தாண்டு புதிதாக பிறந்த 144 குட்டிகள் உட்பட 827 வரையாடுகள் உள்ளதாக வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது.
இந்தாண்டு ஏப்.20க்கு பிறகு கணக்கெடுப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.