சபாநாயகராக தேஜ., கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு
சபாநாயகராக தேஜ., கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு
சபாநாயகராக தேஜ., கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு

நிபந்தனை
ஆளுங்கட்சி அல்லது கூட்டணியின் உறுப்பினரே சபாநாயகர் பதவிக்கு வருவது வழக்கம். அந்த வகையில், கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளை ஒருவழியாக சரிகட்டி, தன் வேட்பாளரை தேர்வு செய்ய பா.ஜ., திட்டமிட்டது. முந்தைய காலங்களை போல இப்போதும் போட்டி இல்லாமல் ஒரு மனதாக தேர்வு செய்ய விரும்பியது.
சந்தேகம்
சபைக்குள் எம்.பி.,க்கள் உறுதிமொழி ஏற்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, 'டெட்லைன்' நெருங்கிவிட்டதால் மூத்த தலைவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.திடீரென இண்டியா கூட்டணி தலைவர்கள் சிலர், சபையை விட்டு அவசரமாக வெளியேறினர். நண்பகல் வரை நேரத்தை கடத்தினால், சபாநாயகர் தேர்வில் போட்டி இல்லாமல் செய்துவிடலாம் என பா.ஜ., முயற்சி செய்வதாக இண்டியா அணிக்கு சந்தேகம் எழுந்ததாக தெரிகிறது.
ஆலோசிக்கவில்லை
காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு தரப்பட்டது. இப்போது கேட்டால் பிறகு பேசிக்கொள்ளலாம்; முதலில் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தாருங்கள் என்கின்றனர். பிரதமரின் வாக்குறுதிகள் பற்றி நமக்கு நன்றாக தெரியுமே. எப்படி நம்ப முடியும்?'' என்றார்.
தேர்வு
இன்று (ஜூன் 26) லோக்சபா துவங்கியதும் சபாநாயகரை தேர்வு செய்யும் பணி துவங்கியது. ஓம்பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அதனை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, குமாரசாமி உள்ளிட்ட 15 பேர் வழிமொழிந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை அக்கட்சி எம்.பி., பிரேமசந்திரன் முன்மொழிந்தார். கனிமொழி உள்ளிட்ட 3 பேர் வழிமொழிந்தனர்.
வாழ்த்து
குரல் ஓட்டெடுப்பு மூலம், சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் கைகுலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மோடியும், ராகுலும் கைகுலுக்கி கொண்டனர். பிறகு இருவரும் ஓம்பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இதன் பிறகு இருவரும், சபாநாயகரை வாழ்த்தி பேசினர்.
துணை சபாநாயகர்
சபாநாயகர் தேர்தல் முடிந்த நிலையில், அடுத்து கட்சிகளின் கவனம் துணை சபாநாயகர் பதவியை நோக்கி திரும்பி உள்ளது. இந்தப் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ., விட்டுக் கொடுக்குமா அல்லது தே.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளர் வேட்பாளர் களமிறங்குவாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.