சுமூகமாக செல்லும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: காங்., தலைவர் கார்கே
சுமூகமாக செல்லும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: காங்., தலைவர் கார்கே
சுமூகமாக செல்லும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: காங்., தலைவர் கார்கே
ADDED : ஜன 13, 2024 05:34 PM

புதுடில்லி: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் காணொளி வாயிலாக விவாதம் நடத்தினோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசித்தோம்.
ராகுல் மணிப்பூரில் துவங்க உள்ள யாத்திரையில் அனைத்து இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களின் வசதிக்கேற்ப பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். பொருளாதாரப் பிரச்னைகளை எழுப்புவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ராகுல் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே தெரிவித்துள்ளார்.
சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் கார்கேவை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது தொகுதி பங்கீடு பற்றி இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.