Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மின்திட்டத்தில் ஊழல்: தெலுங்கானா மாஜி முதல்வருக்கு நோட்டீஸ்

மின்திட்டத்தில் ஊழல்: தெலுங்கானா மாஜி முதல்வருக்கு நோட்டீஸ்

மின்திட்டத்தில் ஊழல்: தெலுங்கானா மாஜி முதல்வருக்கு நோட்டீஸ்

மின்திட்டத்தில் ஊழல்: தெலுங்கானா மாஜி முதல்வருக்கு நோட்டீஸ்

UPDATED : ஜூன் 12, 2024 07:26 AMADDED : ஜூன் 12, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
ஐதராபாத்: தெலுங்கானாவில் முந்தைய ஆட்சியில் மின்திட்டத்தில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்திர சேகரராவிற்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தெலுங்கானாவில் முந்தைய பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி முதல்வராக சந்திரசேகரராவ் இருந்தார். அப்போது சத்தீஷ்கர் மாநிலத்திடமிருந்து மின்சாரம் விலைக்கு வாங்கியது தொடர்பாக போடப்பட்ட மின் திட்டத்தில் பல்வேறு முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது.

தற்போது தெலுங்கானாவில் காங். ஆட்சி நடக்கிறது. முறைகேடு தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி கே.எல். நரசி்மமரெட்டி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ், 25 அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வரும் 15-ம் தேதி விசாரணை கமிஷன் முன் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us