சனாதன விவகாரம்: உதயநிதிக்கு நிபந்தனை ஜாமின்
சனாதன விவகாரம்: உதயநிதிக்கு நிபந்தனை ஜாமின்
சனாதன விவகாரம்: உதயநிதிக்கு நிபந்தனை ஜாமின்

உதயநிதி ஆஜர்
இதற்கு எதிராக வெங்கடேஷ், ஆதவன் மற்றும் மதுகூர் ராமலிங்கம் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் நடவடிக்கைக்கு தடை கோரி கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணா எஸ் தீக்சித், இந்த வழக்கில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூன் 25) காலை நீதிபதி கே.என்.சிவகுமார் முன்பு ஆஜரானார்.
ஒத்திவைப்பு
அப்போது உதயநிதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவருக்கு ஜாமின் வழங்க கோரிக்கை வைத்தும், வழக்கில் நேரில் ஆஜராக நிரந்தர விலக்கு கோரியும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட உதயநிதிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கும் மனு மீதான விசாரணை முடிந்த பிறகு, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.