தங்கம் கடத்திய ரன்யா ராவின் தந்தையான ஏ.டி.ஜி.பி.,க்கு சிக்கல்? அவருக்கும் தொடர்புள்ளதா என விசாரிக்க குழு அமைப்பு
தங்கம் கடத்திய ரன்யா ராவின் தந்தையான ஏ.டி.ஜி.பி.,க்கு சிக்கல்? அவருக்கும் தொடர்புள்ளதா என விசாரிக்க குழு அமைப்பு
தங்கம் கடத்திய ரன்யா ராவின் தந்தையான ஏ.டி.ஜி.பி.,க்கு சிக்கல்? அவருக்கும் தொடர்புள்ளதா என விசாரிக்க குழு அமைப்பு

பண ஆசை
ரன்யா ராவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் ரன்யா ராவ் கொடுத்த தகவலின்படி, அவரது நண்பரும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளருமான தருண் கொண்டரு ராஜு கைது செய்யப்பட்டார்.
அனைத்து வசதி
இதையடுத்து, தருண் கூறியதன்படி துபாய், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து, தங்க கட்டிகளை கடத்தி வந்துள்ளார். ரன்யா ராவ் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தருண் செய்து கொடுத்து உள்ளார்.
கைது வாய்ப்பு
ஆனால் ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட பின், அவரது வளர்ப்பு தந்தையான ஏ.டி.ஜி.பி., ராமசந்திர ராவ் கூறுகையில், ''எனது மகளுக்கும், ஜதினுக்கும் மூன்று மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது. அதற்கு பின், எங்களுடன் தொடர்பில் இல்லை,'' என்று கூறி இருந்தார்.
'பி' அறிக்கை
ராமச்சந்திர ராவ், கடந்த 2014ல் தென்மண்டல ஐ.ஜி.,யாக இருந்த போது, கேரளாவுக்கு ஆம்னி பஸ்சில் கடத்தப்பட்ட 2.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 2 கோடி ரூபாயை, ராமச்சந்திர ராவ், 'ஆட்டை' போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்கும் பதிவானது.
நிறைய தொழில்
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில், அமைச்சர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. பா.ஜ., தலைவர்கள் அரசியலுக்காக பொய் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். ஏதாவது தகவல் இருந்தால் சி.பி.ஐ.,யிடம் தெரிவிக்கட்டும்,'' என்றார்.