Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்

தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்

தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்

தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்

ADDED : ஜூன் 07, 2025 05:25 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:டில்லி தேசிய விலங்கியல் பூங்கா தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்த குற்றச்சாட்டை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நிராகரித்துள்ளார்.

டில்லி மிருகக்காட்சி சாலையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார். இது விலங்குகளின் நலனுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பூபேந்தர் யாதவ் பதிவிட்டுள்ளதாவது:

டில்லி மிருகக்காட்சிசாலை, குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள பசுமை மிருகக்காட்சிசாலை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளையால் இந்த மையம் நிர்வகிக்கப்படுகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு, விலங்கு சுகாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வளர்ப்பதே முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இதுபோன்ற ஒத்துழைப்புகள் புதியவை அல்ல, வழக்கமானவை தான்.இந்தியா முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களால் வழக்கமாகப் பின்பற்றப்படுகின்றன

சிலர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களின் மனதில் சந்தேகங்களை உருவாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இவ்வாறு பூபேந்தர் யாதவ் பதிவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us