Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நாளை பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம்

நாளை பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம்

நாளை பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம்

நாளை பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம்

ADDED : பிப் 10, 2024 06:22 AM


Google News
துாரவாணி நகர்: பெங்களூரு தமிழ் மன்றம் நடத்தும், பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம் நாளை நடக்கிறது.

இதுகுறித்து, மன்ற தலைவர் பாஸ்கரன், செயலர் மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

துாரவாணி நகர் ஐ.டி.ஐ., குடியிருப்பில் உள்ள வித்யா சந்திர் பள்ளி வளாகத்தில், பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம், நாளை காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இது, 245வது பாவாணர் பாட்டரங்கமாகும்.

கே.ஆர்.புரம் பா.ஜ., -- எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பள்ளி மாணவ - மாணவியருக்கு பரிசு, சான்றிதழ், நலத்திட்டங்கள் வழங்குகிறார். 'இனவெழுச்சி பொங்கல்' என்ற தலைப்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கவிஞர்களும், பெங்களூரை சேர்ந்தோரும் பாடுகின்றனர்.

அவர்களுக்கு, கவிக்கடல் என்ற விருது சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவர். மதியம் 1:00 மணிக்கு அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா தொடர்புக்கு 98455 26064 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பாவாணர் பாட்டரங்க இயக்குனர் இராம இளங்கோவன் நன்றி கூறுகிறார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us