நாளை பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம்
நாளை பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம்
நாளை பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம்
ADDED : பிப் 10, 2024 06:22 AM
துாரவாணி நகர்: பெங்களூரு தமிழ் மன்றம் நடத்தும், பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம் நாளை நடக்கிறது.
இதுகுறித்து, மன்ற தலைவர் பாஸ்கரன், செயலர் மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
துாரவாணி நகர் ஐ.டி.ஐ., குடியிருப்பில் உள்ள வித்யா சந்திர் பள்ளி வளாகத்தில், பொங்கல் சிறப்பு பாவாணர் பாட்டரங்கம், நாளை காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இது, 245வது பாவாணர் பாட்டரங்கமாகும்.
கே.ஆர்.புரம் பா.ஜ., -- எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பள்ளி மாணவ - மாணவியருக்கு பரிசு, சான்றிதழ், நலத்திட்டங்கள் வழங்குகிறார். 'இனவெழுச்சி பொங்கல்' என்ற தலைப்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கவிஞர்களும், பெங்களூரை சேர்ந்தோரும் பாடுகின்றனர்.
அவர்களுக்கு, கவிக்கடல் என்ற விருது சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவர். மதியம் 1:00 மணிக்கு அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா தொடர்புக்கு 98455 26064 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பாவாணர் பாட்டரங்க இயக்குனர் இராம இளங்கோவன் நன்றி கூறுகிறார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.