காங்கிரசும், ஆர்.ஜே.டி.,யும் சேர்ந்து பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக ஆக்கி விட்டனர்: பிரதமர் மோடி
காங்கிரசும், ஆர்.ஜே.டி.,யும் சேர்ந்து பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக ஆக்கி விட்டனர்: பிரதமர் மோடி
காங்கிரசும், ஆர்.ஜே.டி.,யும் சேர்ந்து பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக ஆக்கி விட்டனர்: பிரதமர் மோடி

வளர்ச்சி திட்டங்கள்
இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும். இதற்கு பீஹார் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் விரைவான வளர்ச்சியால் உலக தலைவர்கள் ஈர்க்கப்பட்டு உள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் பீஹார் மாநிலத்தில் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும். நாங்கம் பீஹார் மாநிலத்திற்கு நிறைய செய்து இருக்கிறோம். இன்னும் நிறைய செய்ய உள்ளோம். பீஹார் மாநிலம் செழிக்கும்.
பெரும் பங்கு
மேலும் நாட்டின் செழிப்பிலும் பெரும் பங்கு வகிக்கும். கடந்த 11 ஆண்டுகளாக, ஏழைகளின் பாதையில் உள்ள ஒவ்வொரு தடையையும், அகற்ற எங்கள் அரசாங்கம் பாடுபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அது தொடரும். இவ்வளவு கடினமாக உழைத்த பிறகு, இன்று நல்ல பலன்களைப் பார்க்கிறோம். நாட்டின் வறுமைக்கு காங்கிரஸ் தான் காரணம், காங்கிரஸ் குடும்பங்கள் செல்வந்தர்களாக மாறியபோது, மக்கள் ஏழைகளாவே இருந்தனர். இவ்வாறு அவர் பேசினார்.