Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; நாகை தி.மு.க., புள்ளி குறித்து விசாரணை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; நாகை தி.மு.க., புள்ளி குறித்து விசாரணை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; நாகை தி.மு.க., புள்ளி குறித்து விசாரணை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; நாகை தி.மு.க., புள்ளி குறித்து விசாரணை

UPDATED : ஜூன் 20, 2025 01:36 PMADDED : ஜூன் 20, 2025 01:19 PM


Google News
Latest Tamil News
சென்னை: நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக புகார்கள் சென்றதால், தி.மு.க., முக்கிய புள்ளியின் பின்னணி குறித்து, என்.சி.பி., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

என்.சி.பி., எனப்படும் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கடந்த 2023ல் டில்லியில் சோதனை செய்தனர். அப்போது, வேன் ஒன்றில், மெத்ஆம்பெட்டமைன் கடத்தப்பட்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில், இந்த போதைப்பொருள், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவருக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.

தி.மு.க., முக்கிய புள்ளி

அவர், தி.மு.க., முக்கிய புள்ளி என்பதும், ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, டில்லியைச் சேர்ந்த என்.சி.பி., அதிகாரிகள் விழுந்தமாவடி சென்று, மகாலிங்கம் வீட்டில் சோதனை நடத்தினர். கஞ்சா கடத்தல் வழக்கில், விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கத்தை நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் போலீசார் கடந்தாண்டு கைது செய்தனர்.

அவரது மகனும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான அலெக்சை தேடி வந்தனர். இருவரும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பதால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளுடன் மகாலிங்கத்திற்கு ஜாமினும், அலெக்சுக்கு முன்ஜாமினும் வழங்கி உத்தரவிட்டது.

மெத்ஆம்பெட்டமைன்

இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரலில், நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்ஆம்பெட்டமைன் கடத்தப்பட்டது தொடர்பாக, என்.சி.பி., அதிகாரிகளால் அலெக்ஸ் கைது செய்யப்பட்டார்.

மகாலிங்கம், அலெக்ஸ் துாண்டுதலில், அவர்களின் கூட்டாளிகள் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக என்.சி.பி., அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.தி.மு.க., முக்கிய புள்ளியான மகாலிங்கம், அலெக்ஸ் ஆகியோரை இயக்குவது யார்; இவர்களின் பின்னணி குறித்து என்.சி.பி., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



சர்வதேச கும்பலுடன் தொடர்பு

அவர்கள் கூறியதாவது: மகாலிங்கம், அலெக்ஸ் ஆகியோர், மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில், இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

இவர்களின் பின்னணி குறித்தும், மகாலிங்கம், அலெக்ஸ் கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடக்கிறது. மகாலிங்கத்தை போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்றே, விழுந்தமாவடி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us