Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பிஷப்பை விமர்சித்த பினராயி: கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு

பிஷப்பை விமர்சித்த பினராயி: கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு

பிஷப்பை விமர்சித்த பினராயி: கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு

பிஷப்பை விமர்சித்த பினராயி: கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு

ADDED : ஜூன் 11, 2024 06:14 PM


Google News
திருவனந்தபுரம்:

லோக்சபா தேர்தலில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில், ஒரு தொகுதியில் மட்டுமே, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு, முதல்வர் பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யாக்கோப்படை சிரியன் திருச்சபையின் முன்னாள் பிஷப் கீ வர்கீஸ் கூரிலோஸ் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், 'தேர்தல் தோல்வியிலிருந்து கம்யூனிஸ்டுகள் பாடம் கற்க வேண்டும். இல்லாவிட்டால் மேற்கு வங்கம், திரிபுராவில் ஏற்பட்ட நிலை கட்சிக்கு ஏற்படும்.

'கடந்த 2018ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கொரோனா காலத்தில் திறம்பட செயலாற்றியதால் தான் கம்யூ., முன்னணி 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எப்போதும் வெள்ளம், தொற்று நோய்கள் உதவ முடியாது' என்றார்.

இதுபற்றி முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், 'பிஷப்பின் அறிக்கையை பார்த்தேன். இதிலிருந்து பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என தெரிகிறது' என்றார், கிண்டலாக.

முதல்வரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கேரள எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸின் சதீசன் கூறுகையில், ''பினராயி விஜயன் விமர்சனங்களை சகித்துக் கொள்ள வேண்டும். அவர் தன் கட்சிக்குள் அல்லது வெளியே எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us