
பதிலளிப்பார்
அதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடக்கும். இதற்கிடையே, பிரதமர் மோடி தன் அமைச்சரவையை பார்லிமென்டில் அறிமுகம் செய்வார். இறுதியில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார். அடுத்த மாதம் 3ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, 22ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது.
பதவி பிராமணம்
இடைக்கால சபாநாயகருக்கு உதவும் வகையில், ஒரு குழுவையும் ஜனாதிபதி அமைத்துள்ளார். இதில், காங்கிரசின் கொடிகுன்னில் சுரேஷ், தி.மு.க.,வின் பாலு, பா.ஜ.,வின் ராதா மோகன் சிங், பாகுன் சிங் குலஸ்தே, திரிணமுல் காங்.,கின் சுதிப் பந்தோபாத்யாய் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இந்த குழுவில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், இந்த பொறுப்பை ஏற்க மறுத்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, திரிணமுல் எம்.பி., சுதிப் பந்தோபாத்யாயை நேற்று இரவு சந்தித்து பேசினார்.