Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆவேசம்! காங்., தொண்டர்களுக்கு ரூ.150 கோடி வழங்குவதா? அரசு பணத்தை கட்சிக்கு வழங்க பா.ஜ., கடும் எதிர்ப்பு

ஆவேசம்! காங்., தொண்டர்களுக்கு ரூ.150 கோடி வழங்குவதா? அரசு பணத்தை கட்சிக்கு வழங்க பா.ஜ., கடும் எதிர்ப்பு

ஆவேசம்! காங்., தொண்டர்களுக்கு ரூ.150 கோடி வழங்குவதா? அரசு பணத்தை கட்சிக்கு வழங்க பா.ஜ., கடும் எதிர்ப்பு

ஆவேசம்! காங்., தொண்டர்களுக்கு ரூ.150 கோடி வழங்குவதா? அரசு பணத்தை கட்சிக்கு வழங்க பா.ஜ., கடும் எதிர்ப்பு

ADDED : ஜன 11, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ''காங்கிரஸ் தொண்டர்கள் மஜா செய்வதற்கும், மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கும், அரசு பணம் 150 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு வழங்க மட்டும் அரசிடம் பணம் இல்லை. பள்ளி கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்கு பணம் இல்லை,'' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கடுமையாக குற்றம் சாட்டினார்.

சட்டசபை தேர்தலின்போது, 'கிரஹ ஜோதி, கிரஹ லட்சுமி, அன்ன பாக்யா, சக்தி, யுவநிதி' ஆகிய ஐந்து வாக்குறுதி திட்டங்கள் காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டன. இதில், முதல் நான்கு வாக்குறுதி திட்டங்கள் ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டன. ஐந்தாவது திட்டமான யுவநிதி திட்டத்தை, ஷிவமொகாவில் இன்று முதல்வர் சித்தராமையா, துவக்கி வைக்கிறார்.

கவுரவ நிதி


இந்த வாக்குறுதித் திட்டங்களை சரியாக அமல்படுத்துவதற்காக, மாநிலம், மாவட்டம், சட்டசபை அளவில் கமிட்டிகள் அமைக்கப்படுவதாக நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் அறிவித்தார்.

அதுவும், மாநில அளவிலான கமிட்டியில், கேபினெட் அமைச்சர் அந்தஸ்துடன், ஒரு தலைவர், இணை அமைச்சர் அந்தஸ்துடன் ஐந்து துணை தலைவர்கள் இருப்பர் எனவும் தெரிவித்தார்.

மேலும், 'ஒவ்வொரு கமிட்டியிலும், 31 உறுப்பினர்கள் இருப்பர். காங்., கட்சி தொண்டர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்கப்படும்.

இவர்களுக்கு அலுவலகம் மற்றும கவுரவ நிதி வழங்கப்படும். மாதந்தோறும் கூடுதலாக 50 ரூபாய் தரப்படும்.

11,000 பேருக்கு பதவி


'தாலுகா அளவில், 21 உறுப்பினர்கள் இருப்பர். இப்படி, 224 சட்டசபை தொகுதிகளிலும், 11,000 கட்சி தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் அரசின் கஜானாவில் இருந்து கவுரவ நிதி வழங்கப்படும்' எனவும், முதல்வர் அறிவித்தார்.

இதற்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரில் நேற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:

வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு வெறும், 100 கோடி ரூபாய் கொடுத்தனர். 3,000 - 4,000 ரூபாய் நிவாரண நிதி தந்திருக்க வேண்டும்.

ஆனால், வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு 150 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளனர்.

காங்கிரஸ் தொண்டர்கள் மஜா செய்வதற்கும், மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கும், இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுகிறது.

இதற்கு கேபினெட் அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்படுகிறது.

சிறையில் அடைப்பு


ஆனால், விவசாயிகளுக்கு வழங்க அரசிடம் பணம் இல்லை. பள்ளி கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்கு பணம் இல்லை. காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ள பணத்தை, பள்ளிகள் மேம்பாட்டிற்கு வழங்கலாமே.

வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, அதிகாரிகளை பயன்படுத்தி கொள்ளலாம். அரசு அலுவலகங்களில் தொழில்நுட்பங்கள் சரியாக வேலை செய்யவில்லை.

இதனை சரி செய்வதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். ராமர் என்பவர் கற்பனை மட்டுமே, உண்மை இல்லை என்று நீதிமன்றத்தில் காங்கிரசார் வாதாடினர். கன்னியாகுமாரியில் இருந்து, காஷ்மீர் வரை ராமர் இருந்ததற்கான பல சான்றுகள் உள்ளன.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக போராட்டம் நடத்திய அத்வானி, லாலு பிரசாத் யாதவை காங்கிரசார் சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us