Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜூன் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது

ஜூன் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது

ஜூன் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது

ஜூன் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது

ADDED : ஜூன் 13, 2024 01:50 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக பொறுப்பேற்றதும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், ஜூன் 22ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2017ல் ஜூலை 1ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும் வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவர் ஆவார். அதே நேரத்தில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். கடைசியாக 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ல் நடைபெற்றது.

அதன்பிறகு, லோக்சபா தேர்தலுக்கு பிறகே அடுத்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும், நிதியமைச்சராக மீண்டும் நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இந்த நிலையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் புதுடில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us