Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!

அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!

அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!

அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!

ADDED : மே 13, 2025 12:19 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த போர் முடிவு வந்தது. இருநாடுகளின் டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் நேற்று முக்கிய பேச்சு நடத்தினர். தற்போது, ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது'' என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எல்லையில் தற்போதைய சூழல் குறித்து ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி எல்லைகளில் தொடர்ந்து உஷாராக இருக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார் என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us