புதிய வருமான வரி திட்டத்தில் சலுகை: நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக உயர்வு
புதிய வருமான வரி திட்டத்தில் சலுகை: நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக உயர்வு
புதிய வருமான வரி திட்டத்தில் சலுகை: நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக உயர்வு
UPDATED : ஜூலை 24, 2024 07:15 AM
ADDED : ஜூலை 23, 2024 12:42 PM

புதுடில்லி: மத்திய பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரித் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, புதிய நடைமுறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
வருமான வரி தொடர்பான அறிவிப்புகள்
* வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும்.
* அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதற்கு ஒரே வரி முறை அறிமுகம் செய்யப்படும். இதுவரை இருந்த 2 வரி முறைகள், ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரி முறை நடைமுறைப்படுத்தப்படும்.
* தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்படுவது இனி குற்றமாக கருதப்படாது.
* இணைய வர்த்தகத்திற்கான டி.டி.எஸ் குறைக்கப்படும்.
* நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீதம் குறுகிய மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.
* அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி நடைமுறை ரத்து செய்யப்படுகிறது
* இந்தியாவில் சொகுசு கப்பல் இயக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்படும்.
தனிநபர் வருமான வரி
* வருமான வரி செலுத்துவோரில் 3ல் 2 பங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.
* புதிய நடைமுறையில் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு
* புதிய கணக்கு தாக்கல் முறையில் ரூ.3 லட்சம் வரை வருமான வரி பிடித்தம் கிடையாது.
* ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை 5 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்
* ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
* ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
* ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
* ரூ.15 லட்சத்திற்கும் மேல் 30 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.