நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்கிய 1563 பேருக்கு ஜூன் 23ல் மறுதேர்வு
நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்கிய 1563 பேருக்கு ஜூன் 23ல் மறுதேர்வு
நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்கிய 1563 பேருக்கு ஜூன் 23ல் மறுதேர்வு

சந்தேகம்
மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, கடந்த, மே, 5ம் தேதி நாடு முழுதும், 571 நகரங்களில், 4,750 மையங்களில் நடந்தது. இதில், 23 லட்சத்து, 33,297 பேர் தேர்வு எழுதினர். தேர்வு நாளன்று, ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.
கருணை மதிப்பெண்கள்
இந்த மையங்கள், மேகாலயா, ஹரியானாவின் பகதுார்கர்க், சத்தீஸ்கரின் தண்டேவடா, பலுாத், குஜராதின் சூரத் மற்றும் சண்டிகரில் அமைந்திருந்தன. அங்கு தேர்வு எழுதிய, 1,563 மாணவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, என்.சி.இ.ஆர்.டி.,யின் பழைய புத்தக விடையை அளிப்பதா, புதிய புத்தக விடையை அளிப்பதா என்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஜூன் 30ல் ரிசல்ட்
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஜூலை 6ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகான கவுன்சிலிங் நடக்க இருக்கும் நிலையில், அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 23ம் தேதி 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 30ல் முடிவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டதுடன், மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை இல்லை.மறுதேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு கருணை மதிப்பெண் நீக்கப்பட்டு, அசல் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.