மத்திய அமைச்சருக்கு எம்.பி.பாட்டீல் கடிதம்
மத்திய அமைச்சருக்கு எம்.பி.பாட்டீல் கடிதம்
மத்திய அமைச்சருக்கு எம்.பி.பாட்டீல் கடிதம்
ADDED : பிப் 12, 2024 06:52 AM
பெங்களூரு: 'பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்கு ஆலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
வி.ஐ.எஸ்.பி., என்ற விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்கு ஆலை, கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. சமீப ஆண்டுகளில், அதன் செயல்பாடு சவால்களை சந்தித்து வருகிறது.
இந்த தொழிற்சாலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்து, அதன் மறுமலர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.