மாண்டியா காங்., தலைவர்கள் சுமலதாவுக்கு எதிர்ப்பு கதவை 'ஓங்கி அடைத்த' அமைச்சர் செலுவராயசாமி
மாண்டியா காங்., தலைவர்கள் சுமலதாவுக்கு எதிர்ப்பு கதவை 'ஓங்கி அடைத்த' அமைச்சர் செலுவராயசாமி
மாண்டியா காங்., தலைவர்கள் சுமலதாவுக்கு எதிர்ப்பு கதவை 'ஓங்கி அடைத்த' அமைச்சர் செலுவராயசாமி

ஆசை
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட, சுமலதா ஆசைப்படுகிறார். ஆனால் மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த ம.ஜ.த., மாண்டியா தொகுதியை கேட்கிறது. ஒருவேளை பா.ஜ., 'சீட்' கிடைக்காவிட்டால், சுமலதாவை காங்கிரஸுக்கு அழைத்து வந்து, 'சீட்' கொடுக்க வேண்டும் என்பது, முதல்வர் சித்தராமையாவின் விருப்பமாக உள்ளது. இதற்கு மாண்டியா காங்கிரஸ் தலைவர்கள், எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். குறிப்பாக அமைச்சர் செலுவராயசாமி, எக்காரணம் கொண்டும், சுமலதா காங்கிரசுக்கு வந்துவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். பா.ஜ., 'சீட்'டுக்கு ஆசைப்படுபவரை எதற்காக, நமது கட்சிக்கு அழைத்து வர வேண்டும் என்று கேட்டு வருகிறார்.
அமைச்சர் தொகுதி
அமைச்சர் செலுவராயசாமியின் சொந்த தொகுதியான, நாகமங்களாவை சேர்ந்தவர். வெங்கடரமணகவுடாவின் தம்பி புட்டசாமி கவுடா. கவுரிபிதனுார் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.,வாகவும், மருமகன் சரத் பச்சேகவுடா ஹொஸ்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளனர்.