Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/"எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் வெட்கக்கேடானது": மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பேட்டி

"எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் வெட்கக்கேடானது": மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பேட்டி

"எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் வெட்கக்கேடானது": மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பேட்டி

"எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் வெட்கக்கேடானது": மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பேட்டி

ADDED : ஜூன் 16, 2024 05:50 PM


Google News
Latest Tamil News
இம்பால்: 'எனது சொந்த மாநிலத்திலேயே, எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது வெட்கக்கேடானது' என மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியாகினர். இந்த பிரச்னை தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு சிறு கலவரங்கள் வெடிக்கின்றன. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது வன்முறை கும்பல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.

உத்தரவு

இது தொடர்பாக, ஆங்கில சேனலுக்கு பைரேன் சிங் அளித்த பேட்டி: அமைதியை முழுமையாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனது சொந்த மாநிலத்திலேயே, எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது வெட்கக்கேடானது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த தலைமைச் செயலாருக்கு உத்தரவிட்டுள்ளேன். வன்முறையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us