Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சிக்ஸர் அடித்தவர் பலி: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பரிதாபம்

சிக்ஸர் அடித்தவர் பலி: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பரிதாபம்

சிக்ஸர் அடித்தவர் பலி: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பரிதாபம்

சிக்ஸர் அடித்தவர் பலி: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பரிதாபம்

ADDED : ஜூன் 29, 2025 09:43 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: பஞ்சாபில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிக்ஸர் அடித்த வீரர், அடுத்த சில வினாடிகளில் மாரடைப்பால் இறந்தார். இந்த சோக சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பஞ்சாபின் பிரோஸ்பூரில் டி.ஏ.வி பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை சிலர் வீடியோ எடுத்தனர்.

அந்த வீடியோவில், பேட்டிங் செய்தவர், தான் எதிர்கொண்ட பந்தை சிக்ஸருக்கு அனுப்புகிறார். அதை தொடர்ந்து மைதானத்தின் நடுப்பகுதிக்கு நடந்து சென்றவர் அப்படியே சரிந்து கீழே விழுகிறார். உடனே அங்கிருந்த மற்ற வீரர்கள் அவருக்கு உதவ முன்வருகின்றனர். இருப்பினும் அவர் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். அதை தொடர்ந்து நெஞ்சுவலியால் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர் ஹர்ஜீத் சிங் என்பது தெரியவருகிறது. இந்த வீடியோ காட்சி தான் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதே போல கடந்த 2014 ல் மும்பையில் ஒரு சம்பவம் நடந்தது.

சமீப காலங்களில், 20 வயதுக்குட்பட்டவர்கள் கூட இதேபோன்ற நிலையை சந்தித்துள்ளனர். இந்த சம்பவம், அனைவரும் தங்கள் உடல்நலத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் வகையில் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us