சரத்பவார், உத்தவை சந்திக்கிறார் மம்தா
சரத்பவார், உத்தவை சந்திக்கிறார் மம்தா
சரத்பவார், உத்தவை சந்திக்கிறார் மம்தா
UPDATED : ஜூலை 11, 2024 07:42 PM
ADDED : ஜூலை 11, 2024 07:28 PM

மும்பை: நாளை மும்பை வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த- ராதிகாமெர்சண்ட் திருமணம் நாளை (ஜூலை12) மும்பையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் முகேஷ் அம்பானி அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
இதையடுத்து மஹாராஷ்டிரா வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முகேஷ் அம்பானி இல்ல திருமணத்தில் பங்கேற்கிறார். அதன் பின், இண்டியா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்., சரத்சந்திரபவார் கட்சியின் சரத்பவார், உத்தவ் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்திக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்கு பின்னர் இண்டியா கூட்டணி தலைவர்களை முதன்முறையாக மம்தா சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.