Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு

UPDATED : ஜூன் 01, 2025 06:08 PMADDED : ஜூன் 01, 2025 05:50 PM


Google News
Latest Tamil News
கோல்கட்டா: முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் வக்ப் சட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அங்கு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வின் மூத்த தலைவருமான அமித்ஷா அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

முர்ஷிதாபாத்தில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்துவதற்காக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்ப் சட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார். இதன் மூலம் இந்நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவர் அவமதித்து உள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்த மம்தாவுக்கும், அவரின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

வக்ப் சட்டத்திற்கு எதிராக முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரம் மாநில அரசின் ஆதரவுடன் நடந்தது. அப்போது சிஆர்பிஎப் வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சகம் முயற்சித்தது. ஆனால், அதற்கு மம்தா ஆதரவு தரவில்லை. இதனால், கலவரம் தொடர்ந்தது. திருப்திபடுத்தும் அரசியலுக்காக வக்ப் சட்டத்திற்கு மம்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

வங்கதேசத்தவர்கள் எளிதாக ஊடுருவ வேண்டும் என்பதற்காக மேற்கு வங்க மாநில எல்லையை முதல்வர் மம்தா திறந்துவிட்டு உள்ளார். அவரால் ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்த முடியாது. பா.ஜ., வால் மட்டுமே முடியும்.

எல்லை பாதுகாப்பு படையினருக்கு தேவையான நிலத்தை மம்தா தலைமையிலான அரசு ஒதுக்கவில்லை. அந்த நிலத்தை ஒதுக்கிய பிறகு, ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். அப்படிநடக்கக்கூடாது என்பதற்காக தான் நிலத்தை தர மாநில அரசு மறுக்கிறது.இவ்வாறு அமித்ஷா பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us