மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜன 05, 2024 04:57 AM
ராம்நகர் : குடும்பப் பிரச்னையால் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கனகபுரா இரண்டாவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராம்நகர், கனகபுராவின் ஹாரோஹள்ளியின் சாமுண்டீஸ்வரி லே - அவுட்டில் வசிப்பவர் ரமேஷ் குமார், 24. இவரது மனைவி நுாகரத்னா, 19. ஆந்திராவைச் சேர்ந்த இவர்கள், திருமணத்துக்கு பின் பிழைப்பு தேடி, ஹாரோஹள்ளிக்கு வந்து சாமுண்டீஸ்வரி லே - அவுட்டில் வசித்தனர்.
தம்பதியிடையே ஒற்றுமை இல்லை. தினமும் ஏதாவது ஒரு காரணத்தை கொண்டு சண்டை போட்டுள்ளனர். 2020 ஆகஸ்ட் 14ல், வழக்கம் போன்று தம்பதிக்கு வாக்குவாதம் நடந்தது.
அப்போது கோபமடைந்த கணவர், மனைவியை அடித்துக் கொலை செய்தார்.
வழக்குப் பதிவு செய்த ஹாரோஹள்ளி போலீசார், ரமேஷ்குமாரை கைது செய்தனர். விசாரணையை முடித்து கனகபுரா இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு ஆயுள் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.