Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ முதலைக் கண்ணீர் வடிக்கிறார் கெஜ்ரிவால்; பா.ஜ., விமர்சனம்

முதலைக் கண்ணீர் வடிக்கிறார் கெஜ்ரிவால்; பா.ஜ., விமர்சனம்

முதலைக் கண்ணீர் வடிக்கிறார் கெஜ்ரிவால்; பா.ஜ., விமர்சனம்

முதலைக் கண்ணீர் வடிக்கிறார் கெஜ்ரிவால்; பா.ஜ., விமர்சனம்

ADDED : ஜூன் 29, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: கொரோனா சமயத்தில் ஏழைகளுக்கு பாதுகாப்பு கொடுக்காத கெஜ்ரிவால், தற்போது அவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதாக டில்லி பா.ஜ., விமர்சித்துள்ளது.

ஜந்தர் மந்தரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது;25 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ., குடிசை இருக்கும் இடத்திலேயே வீடு கட்டித் தருவோம் என்று கொடுத்த வாக்குறுதியை மீறி செயல்பட்டு வருகிறது. பணக்கார நண்பர்களுக்காக ஏழைகளின் குடிசைகளை பா.ஜ., அரசு இடித்து தள்ளுகிறது. இது தொடர்ந்தால் பா.ஜ., அரசு, தனது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாது. பிரதமர் மோடி போலி வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.

நான் சொன்னது உண்மையாகிறது. குடிசைகள் இடிக்கப்படும் என்றேன், இடிக்கப்பட்டன. இப்போது சொல்கிறேன், ஒரு வருடத்தில் இலவச மின்சாரத்தையும் நிறுத்திவிடுவார்கள். ஏழைகளின் குரலை அடக்க முடியாது. தேவைப்பட்டால் போராட்டம் நடத்துவோம், எனக் கூறினார்.

கெஜ்ரிவாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு டில்லி பா.ஜ., தலைவர் விரேந்திர சச்தேவா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது; குடிசை மக்களுக்கான என்று ஆம்ஆத்மி நடத்தப்படும் இந்தப் பொதுக் கூட்டத்திற்கு உண்மையான ஆதரவே இல்லை. கெஜ்ரிவால் மீண்டும் அரசியலமைப்புக்கு புறம்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். கொரோனா சமயத்தில் ஏழைகளுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் அவர்களை டில்லியிலிருந்து துரத்தியவர் கெஜ்ரிவால். இன்று அவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார், எனக் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us