Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வெப்பம் அதிகரிப்பு: கோல்கட்டாவுக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்

வெப்பம் அதிகரிப்பு: கோல்கட்டாவுக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்

வெப்பம் அதிகரிப்பு: கோல்கட்டாவுக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்

வெப்பம் அதிகரிப்பு: கோல்கட்டாவுக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்

ADDED : ஜூன் 29, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: டோக்கியோவில் இருந்து டில்லிக்கு வந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, உள்ளே வெப்பநிலை அதிகரித்ததால், கோல்கட்டாவில் தரையிறக்கப்பட்டது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து டில்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. அப்போது, விமானத்தின் உள்ளே தொடர்ச்சியாக வெப்பநிலை அதிகரித்தது. இது குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த விமானம் பாதுகாப்பாக கோல்கட்டாவுக்கு திருப்பி விடப்பட்டு அங்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு விமானத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், அவர்களை மாற்று விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இடையூறுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us