பச்சோந்தி அரசியல்வாதிகளால் கலகலக்குது கர்நாடகா
பச்சோந்தி அரசியல்வாதிகளால் கலகலக்குது கர்நாடகா
பச்சோந்தி அரசியல்வாதிகளால் கலகலக்குது கர்நாடகா
பிள்ளையார் சுழி
கர்நாடகாவுல பதவி, அதிகாரத்துக்காக கட்சி தாவுற பழக்கத்த ஆரம்பிச்சது எப்போது என்று யோசிக்க ஆரம்பித்தால் அதை கண்டுபிடிக்க முடியாது. நேர்மையாக இருக்கோம்னு சொல்லிக் கொண்டே கட்சி தாவுற பழக்கத்துக்கு, பிள்ளையார் சுழி போட்டவங்க.
நம்ப வைத்து கழுத்து அறுப்பு
நமக்கு ஏதாவது நல்லது நடந்துறாதான்னு நினைச்சு, இந்த பச்சோந்திகள நம்பி, ஓட்டு போடுற மக்கள் தான் பாவம்... மக்களோட நிலைமை இப்படி இருந்தா, பச்சோந்தி அரசியல்வாதிகள நம்பி, 'சீட்' கொடுக்குறாங்க பாருங்க கட்சிகளோட தலைவர்கள்... அவங்க நிலையும் பரிதாபம் தான்.. கிட்டதட்ட நம்ப வைச்சு கழுத்தறுக்குற நிலைமை தான்...
சர்வே எடுக்கும் கட்சிகள்
இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வருது. இப்போ இருக்குற கட்சியில, 'சீட்' கொடுக்காம போனா... எந்த கட்சிக்கு ஓடலாம்னு, இப்போ இருந்தே பச்சோந்தி அரசியல்வாதிகள் கணக்கு போட ஆரம்பிச்சி இருக்காங்க. எந்தெந்த கட்சியில இருந்து, எந்தெந்த அரசியல்வாதிகள் எல்லாம் ஓட போறாங்கன்னு, வர்ற நாட்கள்ல கண்கூடாக பார்க்கலாம்.